Thursday, November 22, 2012

கனவு ( ஒரு கவிதை )

ஆள்வோருக்கும்    வாழ்வோருக்கும்  இலவசமாய்க்  கிடைத்திடும் 
துயில் தந்த கனவே ! நீ ஒரு சமதுவச்சின்னம்.

எளியோரும் தனவானாய் சில நொடியில் மாறிடுவான்.
புகழோனும் மனநிறைவாய் கடற்கரையினிலே நடந்திடுவான்.
சட்டமில்லை கேள்வியில்லை நினைத்ததெல்லாம் நடந்திடுமே.
பயங்கொள்ளும் கனவாக இருப்பினும் கண் விழித்ததும்
மனம் நிறைந்து கவலைகள் பஞ்சாகப் பறந்திடுமே.
கனவே ! நீ ஒரு மனநிவாரணி.